Monday, April 14, 2008

தேதி; 11-04-08

அனுப்புநர்;
டேவாணன்
62 வொர்திங் ரோட்
சிங்கப்பூர் 554994

பெறுனர்;
திரு ரஜினிகாந்
21 இலங்கோ சாலை
சென்னை 419956

திரு ரஜினிகாந் அவர்களுக்கு,

உங்களின் தீவிர ரசிகன் எழுதும் ஒரு மடல். அண்மையில் வெளிவந்த சிவாஜி படம் மக்களின் மனதில் ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இதை அறிந்த நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.

உங்களின் நடிப்பு நிறைய மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. நீங்கள் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கும் ' சுப்பர்ஸ்டார்' என்ற பட்டத்தை வென்றிருக்கிறீர்கள். இது குறிப்பிடதக்க ஒரு விஷயமாகும். இளம் நடிகர்களும் சிறுவர்களும் உங்களை ஒரு முன் மாதிரியாக கருதுகிறார்கள். நானும் இவர்களில் ஒருவன். இது பாராட்டத்தக்கது. உங்களின் புகழ் சிறுவர் முதல் முதியோர் வரை பரவியுள்ளது.

உங்களிடம் நற்பன்புகள் எண்ணிலடங்கா, அவற்றுள் எனக்கு பிடித்த நற்பன்பு உங்களின் ஊக்கமே ஆகும்.
' ஆக்கம் அதிர்வினாய் செல்லும் அசைவில்லா
ஊக்கம் உடையான் உழை'
என்ற குறலுக்கு நீங்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாய் விழங்குகிறீர்கள். நீங்கள் சிறு வயதிலிருந்தே ஒரு நல்ல நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள். நீங்கள் தோல்வி அடைந்த போதிலும் நீங்கள் மனம் தளராமல் உங்களின் குறிக்கோலை நோக்கி உளைத்தீர்கள். ஆதலால் தான், நீங்கள் உலகிலேயே சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள்.

உங்களின் சிறந்த நடிப்பால் எனக்கு நடிப்பு துறையின் மீது மதிப்பும் ஆர்வத்தையும் ஊட்டியது. உங்களை நேரில் சந்தித்து உங்களின் ஆசிர்வாதத்தை பெற விரும்புகிறேன். உங்களின் பதிலுக்காக நான் ஆவலுடன் காத்திருப்பேன்.

இப்படிக்கு,
டேவாணன்

No comments: